For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் அரசு ஊழியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தீபாவளி முன் பணம் கேட்டு தமிழக அரசு ஊழியர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) 2வது நாளாக நீடித்தது.

டி-பிரிவு அரசு ஊழியர்களுக்கு மட்டும் தீபாவளி முன் பணம் அளிக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளதையடுத்து, தமிழக அரசு ஊழியர்கள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத்துவங்கியுள்ளனர்.

சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களின் உண்ணாவிரதப்போராட்டம் துவங்கி நடந்து வருகிறது.

இப்பிரச்சினையில் அரசு உடனடியாகத் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால்உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் கூறி அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

தேனி, நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களின் முன்பாக அரசுஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

ஜூலை மாதம் முதல் உயர்த்தப்பட வேண்டிய அகவிலைப் படியையும் உடனடியாக உயர்த்துமாறு கோரியும் அரசுஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X