Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தலைநகர் காபூலை பிடித்தது நார்த்தர்ன் அலையன்ஸ்

Published: Tuesday, November 13, 2001, 5:30 [IST]

காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலைகைப்பற்றினர். இதையடுத்து தலிபான் படையினர் காபூலைக் காலி செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

கடந்த 35 நாட்களாக அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் மீது தாக்குதல்நடத்திவருகின்றனர். மேலும் அங்குள்ள நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்திமுன்னேறி வருகின்றனர்.

கடந்த இரு நாட்களாக தலிபான்களின் முக்கிய நகர்களை நார்த்தர்ன் அலையன்ஸ் பிடித்து வருகிறது.

இன்று அதிகாலை ஆப்கான் தலைநகர் காபூலுக்குள் அலையன்ஸ் படையின் போலீஸ் குழுவினர் முதலில் ஜீப்களில்நுழைந்தனர். இவர்களைப் பார்த்த உடனேயே தலிபான்கள் ஓட ஆரம்பித்துவிட்டனர்.

தங்களது ஆயுதங்களை அங்கேயே விட்டுவிட்டு வாகனங்களில் தலிபான் வீரர்கள் தப்பியோடினர்.

போலீஸ் படையைத் தொடர்ந்து ஏ.கே. ரகத் துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்ச்சர்களுடன் ஏராளமான நார்த்தன்அலையன்ஸ் படையினர் காபூலுக்குள் நுழைந்தனர்.

நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் மாட்டிக்கொண்ட 4 தலிபான் வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

காபூல் நகரின் தெருக்கள் முழுவதும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தான் காணப்படுகின்றனர். மேலும் காபூல்பொதுமக்கள் தெருக்களில் கூடி, நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரை வரவேற்றதுடன், "அல்லாஹூ அக்பர்"என்று கோஷம் எழுப்பியவண்ணம் உள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து படை வீரர்களும் மகிழ்ச்சியில் கோஷம் எழுப்பி வருகின்றனர்,

கடந்த சில நாட்களில் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர், தலிபான்கள் வசமிருந்த மஷார்-ஏ.ஷெரீப், குண்டூஸ்மற்றும் ஹெராத் ஆகிய முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர். இந்நிலையில் காபூலையும் அவர்கள் கைப்பற்றும்நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 178 / 4, 58 Overs