For Quick Alerts
For Daily Alerts
Just In
நேபாள கோவிலில் உலகின் மிகப் பெரிய சூலாயுதம்
காத்மண்டு:
நேபாள நாட்டில் உள்ள மூலக்கோட்காதி கோவிலுக்கு 5 டன் எடையுள்ள 32 அடி உயர தாமிரத்தாலான சூலாயுதம்அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தக் கோவிலுக்காக நேபாள சிவசேனா சார்பில் 32 அடி உயரத்தில், 5 டன் எடையுள்ள தாமிரத்தால்செய்யப்பட்ட திரிசூலம் செய்யப்பட்டுள்ளது.
உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் இந்த திரிசூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) இந்தக் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக நேபாள சிவசேனாத் தலைவர் அருண் சுபேதிகூறினார்.
இந்த சூலாயுதம் பாலாஜூ மாவட்டத்தில் இருந்து காத்மண்டு வழியாக மூலக்கோட்காதி கோவிலுக்கு ஊர்வலமாகஎடுத்துச் செல்லப்பட்டது.
Comments
Story first published: Tuesday, November 13, 2001, 5:30 [IST]