4 பஸ் ஊழியர் சங்கங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்குக் காரணமாக உள்ள நான்கு ஊழியர் சங்கங்களுக்குநோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு இந்தச் சங்கங்கள்தான் காரணம். அதனால்இச்சங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறையைச் சேர்ந்த சி.ஆர். ராஜசேகரன்என்பவர் பொது நல மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி மற்றும் நீதிபதி சிவசுப்பிரமணியன்ஆகியோர் அடங்கிய முதன்மை டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
பின்னர் அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இம்மனு தொடர்பாக அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த வேலைநிறுத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள நான்கு ஊழியர் சங்கங்களும் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ்அனுப்புமாறு உத்தரவிட்டனர்.