தமிழர் கலாச்சாரத்தை அழிக்க ராணுவம் முயற்சி: புலிகள்
கொழும்பு:
தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்க இலங்கை ராணுவம் முயல்வதாக விடுதலைப் புலிகள்குற்றம் சாட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு- அம்பாரை பகுதி புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர் பகுதிகளில் ஆட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சிறப்பு சுற்றுலா, குடிபோதை பழக்கம் எனதமிழர்களுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் ஒத்துவராத, தொடர்பில்லாத பழக்கங்களை ராணுவம் எங்கள்இளைஞர்கள் மத்தியில் திணித்து வருகிறது.
தமிழர்- சிங்களர் இடையிலான நல்லுறவுக்கு வழி செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழர்களின் கலாச்சாரத்தைஅழிக்கும் செயல்களில் ராணுவம ஈடுபட்டுள்ளது.
எங்கள் மக்கள் இது போன்ற அன்னிய கலாச்சாரத்தை எப்போதும் விரும்பியதில்லை. ஆனால், தமிழர்களின்தமிழ்ப் பற்றையும் இனப் பற்றையும் நீர்த்துப் போகச் செய்ய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது.
குறிப்பாக தமிழ் மாணவர்கள், இளைஞர்களைக் குறி வைத்து இது போன்ற நிகழ்ச்சிகளை ராணுவம் நடத்திவருகிறது.
விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதாகக் கூறிக் கொண்டு தடை செய்யப்பட்ட வீடியோக்களை காட்டுகின்றனர்.மாணவர்களுக்கு மதுவகைகளையும் பரிமாறுகின்றனர்.
இதன்மூலம் தமிழர்களின் கல்வியறிவை முடக்கவும், குறிப்பாக இளைஞர்களின் வளர்ச்சியைத் தடுக்கவும்இலங்கை அரசு முயல்கிறது என்று புலிகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது