போலீசாருக்கு சயனைட் பிஸ்கெட் அனுப்பியவனுக்கு 7 வருடம் சிறை
கோயம்புத்தூர்:
போலீசாருக்கு சயனைட் தடவப்பட்ட பேரீச்சம் பழங்களையும் பிஸ்கெட்களையும் அனுப்பிய வாலிபருக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த வாலிபர் அக்பர். அவர் கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்கடம் காவல்நிலையத்துக்கு ஒரு பார்சலை அனுப்பினார். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து குரியர் மூலம் இந்த பார்சலைஅனுப்பியிருந்தார்.
அதில் பேரீச்சம் பழங்களும் பிஸ்கெட்களும் இருந்தன. இந்த பண்டங்களைப் பார்த்தவுடன் போலீசாருக்கு பொறிதட்டியது. இதில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்த அவர்கள் அதை சாப்பிடாமல் சோதனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது இதில் சயனைட் தடவப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 3 மாதம் கழித்து கோயம்புத்தூரில் வைத்தேஅக்பரை வளைத்துப் பிடித்தனர்.
இவர் மீது விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முருகன்,குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறையில் இருக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.