வேட்பு மனு தாக்கல் செய்தார் அப்துல் கலாம்
டெல்லி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இன்று வேட்பு தனது மனுவைத்தாக்கல் செய்தார்.
அவருடைய பெயரை பிரதமர் வாஜ்பாய் முன்மொழிந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சார்பில் ஒரு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதே போல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலாமுக்காக ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ராஜ்யசபா செயலாளர் திரிபாதியிடம் சோனியா காந்தி முதல் மனுவை தாக்கல் செய்ய, பிரதமர் இரண்டாவதுமனுவை தாக்கல் செய்தார்.
இதுவரை 13 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதில் 8 பேரின்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இம் மாதம் 25ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடக்கிறது.
நாளை டெல்லி அரசியல் சட்ட கிளப்பில் நிருபர்களை சந்திக்கிறார் கலாம்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிடும் கேப்டன் லட்சுமி செகல் வரும் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.