For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிரம்பி வழிந்த பிரதமர் அலுவலகம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அப்துல் கலாமுக்காக இன்று கம்யூனிஸ்ட்கள் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்தன.

அப்துல் கலாமுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிரதமர் வாஜ்பாயின்அலுவலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக், உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயமசிங் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக சார்பில் டி.ஆர். பாலு, மதிமுக தலைவர்வைகோ, அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், எம்.பிக்கள்குவிந்தனர்.

இதனால் பிரதமரின் அலுவலகம் நிரம்பி வழிந்தது. அப்துல் கலாமும் வந்து சேர்ந்த பின்னர் அனைவரும்அங்கிருந்து ராஜ்யசபா செயலாளரின் அலுவலகத்துக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர்.

கலாமின் ஒரு புறம் வாஜ்பாய்வர மறுபுறம் சோனியாகாந்தி நடந்து வந்தார். பின்னர் ராஜ்யசபா செயலாளரிடம்கலாம் சார்பில் பிரதமரும் சோனியா காந்தியும் இரு வேட்பு மனுக்களை தனித்தனியே தாக்கல் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X