For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சி விலகிய 2 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய ராமதாஸ் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகிய இரு எம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனசபாநாயகர் காளிமுத்துவுக்கு அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் பேட்டியளித்த அவர்,

சிவகாமி வின்சென்ட், வந்தவாசி எம்.எல்.ஏ. முருகவேல் ராஜன் ஆகியோர் சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில்இருந்து விலகினர்.

கட்சித் தாவல் சட்டப்படி இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பி.எச். பாண்டியன் சபாநாயகராகஇருந்தபோது அமைச்சர் உள்பட 33 எம்.எல்.ஏக்களை கட்திசித் தாவல் சட்டப்படி பதவி நீக்கம் செய்தார்.

அதே விதியைப் பின்பற்றி இவர்களையும் பதவி நீக்க வேண்டும். இந்த விஷயத்தில் சநாபாயகர் 10 நாட்களுக்குள்முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்றார் ராமதாஸ்.

இந்த எம்.எல்.ஏக்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பிரித்ததே அதிமுக தான் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல எம்.எல்.ஏக்களையும் இழுத்து பா.ம.கவை உடைக்க முயற்சி நடந்து வருகிறது.

இந்த வேலையை பா.ம.கவிலிருந்து அதிமுகவுக்குத் தாவி எம்.பியான தலித் எழில்மலை செய்து வருகிறார்.

இப்போதைக்கு இந்த இரு எம்.எல்.ஏக்களையும் எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று சபாநாயஅறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X