கர்நாடகத்தில் ரயில்கள், பஸ்கள் மறிப்பு
மாண்டியா:
சில தமிழ் படங்களில் தலை காட்டிய நடிகர் அம்பரீஷ் தலைமையில் இன்று தமிழகத்துக்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டம் நடந்தது.
ரஜினியின் சில படங்களில் அவரது உதவியுடன் தலைகாட்டியவர் அம்பரீஷ். தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் கன்னடசினிமாவிலேயே செட்டில் ஆகிவிட்டார் அம்பரீஷ். இப்போது மாண்டியா தொகுதியின் எம்.பியாக இருக்கிறார்.
தமிழகத்துக்கு தண்ணீர் விடப்பட்டதை எதிர்த்து கர்நாடகத்தில் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. மாண்டியாவில் நடந்த இந்தப்போராட்டத்துக்கு நடிகர் அம்பரீஷ் தலைமை தாங்கினார். அவரது தலைமையில் நடந்த பேரணியில், உடனே காவிரி ஆணையத்தைக் கூட்டிகர்நாடகத்துக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே மாண்டியாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அந்த மாவட்ட பொதுப் பணித்துறை அலுவலகத்தைப் பூட்டினர்.இதையடுத்து பொதுப் பணித்துறை அலுலகத்தில் இருந்த ஊழியர்கள் உயிருக்கு அஞ்சி வெளியில் ஓடி தப்பினர்.
மாண்டியாவில் பெரும் பதற்றம் நிலவியதால் பஸ் போக்குவரத்தை அரசு நிறுத்தியுள்ளது. இதனால் பெங்களூர்- மைசூர் இடையிலான பஸ்போக்குவரத்து தொடர்ந்து இன்றும் பாதிக்கப்பட்டது. இம் மாவட்டத்தில் நடந்த பல பகுதிகளில் பந்த்தும் நடந்தது.
பல ரயில்களை மாணவர்களும் விவசாயிகளும் மறித்தனர். இதனால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாதே கெளடா நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்துக்கு இனியும் ஒரு சொட்டுதண்ணீர் கூட விட அனுமதிக்க மாட்டோம் என்றார்.
-->