For Daily Alerts
Just In
பாம்பன் அருகே கரை ஒதுங்கிய பைபர் கிளாஸ் படகு
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதியில் அனாதையாக விடப்பட்ட பைபர் கிளாஸ் மீன் பிடி படகு பிடிபட்டது. இதுயாருடையது என்று தெரியவில்லை.
பாம்பன் கடல் பகுதியில் ஒரு பைபர் கிளாஸ் படகு கரை ஒதுங்கியது. அந்தப் படகை சுங்கத் துறையினர் கைப்பற்றி தங்களதுவசம் கொண்டு வந்தனர். அதில் மீன் பிடி வலைகள் மட்டுமே இருந்தன.
இந்தப் படகில் அகதிகள் வந்தனரா அல்லது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய படகா என்பது குறித்து போலீஸாரும், சுங்கத்துறையினரும் விசாரித்து வருகிறார்கள்.
Story first published: Friday, September 6, 2002, 5:30 [IST]