உணவு விஷமானது: அனாதை இல்லத்தைச் சேர்ந்த 120 பேர் உடல் நிலை பாதிப்பு
சென்னை:
சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள அனாதை இல்லத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து அந்த இல்லத்தைச் சேர்ந்த 120 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சமூக நலத்துறையின் சார்பில் இந்த ஆதரவற்றோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள், முதியோர், ஆதரவற்றோர்,பெண்கள் ஆகியோர் தங்கி வாழ்ந்து வருகின்றனர். சுமார் 600 பேர் இங்கு இருந்து வருகின்றனர்.
இன்று பாலா- விஜயா என்ற தம்பதி தங்களது திருமண நாளையொட்டி இந்த இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலை உணவு வழங்கினர்.
கேசரியும், உப்புமாவும் கொண்டு வந்து அவர்கள் இந்த இல்லத்தினருக்குத் தந்தனர். அதை உண்ட 120 பேருக்கும் மயக்கமும், வாந்தியும்ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை மருத்துவமனைகளுக்கு கார், பஸ், லாரிகளில் கொண்டுசெல்லப்பட்டனர். அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 64 பேரின் உடல் நிலை தேறியதால் அவர்கள் அனைவரும் மீண்டும்இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
மற்ற 54 பேரும் தொடர்ந்து மருத்துவமனைகளிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் குறித்து அறிந்தவுடன் சமூக நலத்துறைஅமைச்சர் வளர்மதி மருத்துவமனைக்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார்.
கேசரி அல்லது உப்புமாவில் பல்லி விழுந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று தான் பாண்டிச்சேரியில் பள்ளிகளில் தரப்பட்ட இலவச காலை உணவு சாப்பிட்ட 2,000 மாணவ, மாணவியர் மயக்கமடைந்துமருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு இன்று சென்னையில் இச் சம்பவம் நடந்துள்ளது.