நாகர்கோவில்:
கொல்லத்திற்கு சென்று கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பாக எழுந்துள்ளபிரச்சினையைத் தீர்க்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சமீபத்தில் கேரள மீனவர்களால்தாக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கொல்லம் மாவட்ட கலெக்டர், நாகர்கோவில் வந்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்ககந்தீப்சிங் பேடியுடன் பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேடி பேசுகையில்,
10 பேர் கொண்ட குழு இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மீனவர்கள் கொல்லத்திற்கு சென்றுமீன் பிடிப்பதுதொடர்பாக நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இக்குழுவினர் யோசனை வழங்குவார்கள்.
மேலும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு டோக்கன் வழங்குவது குறித்து யோசிக்கப்படும் என்றார் பேடி.


















