For Daily Alerts
Just In
தூக்கு போட்டு டி.எஸ்.பி. தற்கொலை
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தூக்குப் போட்டு டி.எஸ்.பி. தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர் மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம். இவர் டி.எஸ்.பி.யாக இருந்துவந்தார்.
இவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது உடல் நிலை மோசமாக இருப்பதாலும், தனது 2மகன்களுக்கு சரியான வரன் அமையாத சோகத்தாலும் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
டி.எஸ்.பியே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, January 19, 2004, 5:30 [IST]