போபர்ஸ் ஊழல் வழக்கில் ராஜிவ் விடுதலை
டெல்லி:
போபர்ஸ் பீரங்கி பேர வழக்கில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனடெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதையடுத்து தனது கணவர் மீதான 17 வருட பொய்யான ஊழல் கறை அழிக்கப்பட்டுள்ளதாக சோனியா காந்திதெரிவித்தார்.
போபர்ஸ் நிறுவனத்திடம் இந்தியா பீரங்கிகள் வாங்கியதில் இடைத் தரகர்களுக்கும் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்திக்கும் ரூ. 65 கோடி அளவுக்கு கமிஷன் தரப்பட்டதாக சுவிஸ் வானொலி கூறியதையடுத்து இந்த விவகாரம்பூதகரமாகக் கிளம்பியது.
இதனால் ஆட்சியையே இழந்தார் ராஜிவ் காந்தி. சிபிஐ விசாரித்து வந்த இந்த வழக்கில் காங்கிரசுக்கு எதிராகபல்வேறு காய்களை நகர்த்தி வந்தது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு.
இருப்பினும் இந்த பேரத்தில் ராஜிவ் காந்திக்குத் தொடர்பில்லை, அவர் குற்றமற்றவர் என டெல்லி நீதிமன்றம்அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இதில் ஹிந்துஜா சகோதரர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் மீதானவிசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு காங்கிரசுக்கு பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.