பொடா: திமுகவின் இரட்டை வேடமும்.. அதிமுகவின் பல வேஷமும்
சென்னை:
பொடா விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக சட்டமன்றத்தில் அதிமுக குற்றம் சாட்டியது.
இதையடுத்து பொடா விஷயத்தில் அதிமுக பல வேஷங்கள் போடுவதாக திமுக பதில் குற்றம் சாட்டியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று பேசிய நலத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம்,மக்களவையில் பொடா சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்ட திமுக தமிழகத்தில் மட்டும் அந்தச் சட்டத்தைஎதிர்க்கிறது. இந்த விஷயத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்றார்.
அப்போது இடைமறித்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்கத்தான் பொடா சட்டம் கொண்டு வருவதாக சொன்னார்கள். அதனால் அதை நாட்டு நலன் கருதி ஆதரித்தோம்.ஆனால், தமிழகத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்.
அந்த பயங்கர சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினீர்கள். இதனால் தான் அதை எதிர்த்தோம். சட்டத்தையேவாபஸ் பெறச் சொன்னோம். அதை மத்திய அரசு கேட்கவில்லை. இதனால் கூட்டணியை விட்டு வெளியேவந்துவிட்டோம். இதில் எங்கே இருக்கிறது இரட்டை நிலையும், இரட்டை வேடமும். திமுகவின் நிலை மிகத்தெளிவாகவே இருக்கிறது.
நீங்கள் (அதிமுக) ஏன் அந்தச் சட்டத்தை ஆதரித்தீர்கள். நாங்கள் இரட்டை வேடம் போடுவதாக நீங்கள்சொல்கிறீர்கள். பொடா விஷயத்தில் நீங்கள் பல வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.
முன்னதாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியற்காக இந்த அரசைஉச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது என்றார்.
அப்போது இடைமறித்த சட்ட அமைச்சர் ஜெயக்குமார், உச்ச நீதிமன்றம் கண்டிக்கவில்லை. தனது கருத்தைத் தான்தெரிவித்தது என்றார்.