மண்டபத்தில் பெரும் தீ விபத்து : மீனவர் குடியிருப்புகள் நாசம்- ரூ. 1 கோடி நஷ்டம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் மண்டபம் மீனவர் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 300க்கும் மேற்பட்டவீடுகள், குடிசைகள் எரிந்து போயின. இதனால் ரூ. 1 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மண்டபம் பகுதியில் பல மீனவர் குடியிருப்புகள் உள்ளன. அதில் ஒரு குடியிருப்பில் இன்று அதிகாலை பெரும்தீவிபத்து ஏற்பட்டது. கடல் காற்று பலமாக வீசியதால் குடிசைகளில் வேகமாக தீ பரவியது.
தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து போயின. அருகாமையில் இருந்த பெரிய கட்டடங்களும்இந்தத் தீக்குத் தப்பவில்லை. மீன் பிடி வலைகள், மீன் பிடி சாதனங்கள், வீட்டுப் பொருட்கள் என ரூ. 1 கோடிக்கும்மேலான பொருட்கள் சேதமடைந்தன.
மண்டபம் தீயணைப்பு நிலையத்திலிருந்த தீயணைக்கும் வண்டிகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால், பரமக்குடி,ராமேஸ்வரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகள் வந்த பிறகே தீ அணைக்கப்பட்டது.
இந்த கால தாமதத்தினால் தான் குடிசைகள் அனைத்தும் தீயில் கருகி விட்டதாக மண்டபம் பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.