கள்ளச் சாராயம் கடத்திய சப்-இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்
ஈரோடு:
ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை தான் குடிப்பதற்காக கடத்திச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரோடு அருகே பங்களாபுதூர் என்ற இடத்தில் ரெய்ட் நடத்தியபோது கள்ளச்சாராயம் பிடிபட்டது. இதை அரச்சலூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைத்தனர் போலீசார்.
இந் நிலையில் இந்தக் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சேகர், சாராயத்தை தனது சொந்தஊத்துக்காகவும் வெளியே கொண்டு விற்பதற்காகவும் கடத்தினார். இதை அறிந்த உயர் அதிகாரிகள் இவரைசஸ்பெண்ட் செய்தனர்.
மேலும் இவர் மீது துறைசார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை சமீபத்தில்காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில், இவரது செயல் மகா கேவலமானதாக இருந்ததால்,இவரை நிரந்தரமாகவே பணி நீக்கம் செய்யலாம் என ஈரோடு எஸ்.பி. பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து சேகரை சஸ்பெண்ட் செய்து அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.