மீண்டும் எம்.எல்.ஏ. தேர்தலில் திருமாவளவன் போட்டி?
திட்டக்குடி:
தான் ராஜினாமா செய்த மங்களூர் சட்டமன்றத் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் தராததால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் நின்றுபோட்டியிட்டு வென்ற மங்களூர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் திருமாவளவன். இந்த ராஜினாமாவைசபாநாயகர் காளிமுத்து ஏற்றுக் கொண்டுவிட்டார்.
இதனால், வரும் மக்களவைத் தேர்தலின்போதே இந்தத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அதே தொகுதியில் சுயேச்சையாக நிற்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில்டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்துடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கி போட்டியிடுவோம்என திருமாவளவன் அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த அணியில் ஆரம்பத்திலேயே பிளவு ஏற்படும் சூழல் வந்துவிட்டது. அதிமுக கூட்டணியை டாக்டர்கிருஷ்ணசாமி விரும்புகிறார். ஆனால், திருமாவளவன் அதை விரும்பவில்லை.
இதனால், மங்களூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடக்கும் இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடவும், கடலூர்உள்ளிட்ட சில எம்.பி. தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும் அவர் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.