For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்டிஓ அலுவலகங்களில் அதிரடி ரெய்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோவை, பெரம்பலூர், கரூர், நெல்லை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்டபோக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீசார் திடீர்சோதனை நடத்தினர்.

மாநிலம் முழுவதும் போக்குவரத்து அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர்சோதனைகள் நடத்தினர்.

இச் சோதனையின் போது, பாளையங்கோட்டையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் 4 இடைத்தரகர்களிடம்இருந்து ரூ.8,533 ரொக்கம், செல்போன், 32 ஆவணங்கள் பறிமுதல் செயயப்பட்டன. அந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

அதேபோல் கோவை மாநகரப் போக்குவரத்து அலுவலகத்தில் போலீஸார் உள்ளே நுழைந்ததும் இடைத்தரகர்கள்தப்பித்து ஓடினர். அவர்களில் 4 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இதில் 2 இடைத் தரகர்களிடம்ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணமும், 41 ஆவணங்களும் சிக்கின. இதையடுத்து இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

தப்பி ஓடிய இடைத் தரகர்கள் விட்டுச் சென்ற பைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான லஞ்சப் பணமும், ஆர்சிபுத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் போக்குவரத்து அலுவலகத்தை உட்பக்கம் தாழிட்டு விட்டு சோதனைநடத்தினர். இதில் லஞ்சப் பணம் எதுவும் சிக்கவில்லை.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்த சோதனையில் கேட்பாரற்றுக் கிடந்த ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்சோதனை நடத்தினர். இடைத்தரகர்களை அலுவலகத்திற்கு உள்ளேயும் அனுமதிக்கவில்லை.

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது, எத்தனை பேர்கைது செய்யப்பட்டார்கள் என்பது பற்றிய விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்னும்வெளியிடவில்லை.

லஞ்சம் வாங்குவதில் ஆர்.டி.ஓ. அலுவலக பெண் ஊழியர்களும், ஆண் ஊழியர்களுக்கு சரிக்குச் சமமாக இருப்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X