செளதி: வெளிநாட்டினரின் மனித உரிமைகள் மீறல்
லண்டன்:
செளதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டினரில் பலருக்கு நீதி மறுக்கப்படுவதாகவும்,அவர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் லண்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்புகுற்றம் சாட்டியுள்ளது.
செளதி மனித உரிமைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை:
2.5 கோடி மக்கள் தொகை கொண்ட செளதியில் சுமார் 88 லட்சம் வெளிநாட்டினர்பணியாற்றுகின்றனர். இரண்டு செளதி குடிமகன்களுக்கு ஒரு வெளிநாட்டவர் என்ற அளவில் அந்நாட்டில் குடிமகன்களின் விகிதம் அமைந்துள்ளது.
செளதி அரேபியர்களின் வீடுகளில் பணியாற்றி வரும் வெளிநாட்டினரில் பெரும்பாலானோர்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தவறு செய்தால் நியாயப்படி தண்டனைகொடுக்கப்படுவதில்லை. அநியாயமான அளவில் தண்டிக்கப்படுகிறார்கள்.
அடித்து துன்புறுத்துவது, பொய்யான வாக்குமூலம் பெறுவது போன்ற மனித உரிமை மீறல்கள்நடக்கின்றன. செளதி அரேபிய நீதித்துறையும் மோசமாகவே செயல்படுகிறது.
குறிப்பாக ஆசியப் பெண்கள் செளதி அரேபியர்களின் வீடுகளில் பெரும் கொடுமைகளுக்குஉள்ளாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஓய்வே தரப்படுவதில்லை. கடுமையாக வேலைகள் செய்யபணிக்கப்படுகிறார்கள்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து தலா 15 லட்சம் பேர் வரை செளதி அரேபியாவில்பணியாற்றி வருகின்றனர். அடுத்தபடியாக எகிப்து, சூடான், பிலிப்பைன்ஸ் நாட்டினரும், அதற்குஅடுத்த நிலையில் இந்தோனேசியா, இலங்கை நாட்டினரும் செளதியில் பணியாற்றுகின்றனர்.