முத்திரை தாள் மோசடி: இருவர் சரண்
சிவகாசி &பெங்களூர்:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த சிவகாசியைச் சேர்ந்த அப்துல் சத்தார், பிலால் ஆகியஇருவரும் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
போலி முத்திரைத் தாள் மோசடியில் டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி அதிகாரிராமசாமி சாது, சிவகாசி அச்சக அதிபர் மெகபூப் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடைசியாக கைது செய்யப்பட்ட மெகபூப் ஜானிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முத்திரைத் தாள்மோசடி மன்னன் அப்துல் கரீம் டெல்கியின் தமிழக ஏஜெண்ட் நிஜாமுதீனுக்கு அவர்தான் போலி முத்திரைத்தாள்களை அச்சடித்துக் கொடுத்தது தெரிய வந்தது.
மேலும், அவருக்கு பிலால் மற்றும் அப்துல் சத்தார் ஆகிய இருவரும் உதவியதாகவும் தெரிய வந்தது.
மெகபூப் ஜானின் கைதையடுத்து இந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களைக் கைது செய்ய சிபிஐஅதிகாரிகள் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டிருந்தனர். இந் நிலையில் இருவரும் சங்கரன்கோயில்நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
டெல்கிக்கு உதவிய டாக்டர்கள் கைது:
இதற்கிடையே போலி முத்திரைத் தாள் வழக்கின் நாயகன் அப்துல் கரீம் தெல்கிக்கு எய்ட்ஸ், சர்க்கரை நோய் உள்ளதாக பொய்சான்றிதழ் கொடுத்த பெங்களூரைச் சேர்ந்த இரண்டு டாக்டர்களை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டாக்டர்கள் ஞானேந்திரா மற்றும் சென்ன கேசவா ஆகியோர் கொடுத்த இந்த போலிச் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு ஜாமீனில்வெளியில் வர டெல்கி முயன்றார்.
இந் நிலையில், இந்த மருத்துவ சான்றிதழ் குறித்து சந்தேகமடைந்த சிபிஐ அதிகாரிகள், இரு டாக்டர்களிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணைநடத்தினர். அப்போது, பணம் வாங்கிக் கொண்டு இந்த சான்றிதழ்களை பொய்யாக கொடுத்ததாக இரு டாக்டர்களும் ஒத்துக் கொண்டனர்.
இதையடுத்து இரு டாக்டர்களையும் கைது செய்த, சிபிஐ அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தி ஏராளமான பணத்தையும் பறிமுதல்செய்துள்ளது.