சென்னை:
மூச்சுத் திணறல், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.
செவ்வாய்க்கிழமை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பலபரிசோதனைகள் நடத்தப்பட்டன.
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏதும் இல்லை என்றும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர் நேற்று பிற்பகலில் வீடு திரும்பினார். தற்போது ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும்,சிறிது ஓய்வு தேவைப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.










