For Daily Alerts
Just In
சுனாமியில் பலியானோருக்கு சட்டமன்றம் அஞ்சலி
சென்னை:
மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோருக்கு தமிழக சட்டமன்றம் இன்று அஞ்சலிசெலுத்தியது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இன்று 2ம் நாள் கூட்டம் தொடங்கியதும்
நரசிம்மராவ், கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் நீதிபதி மு.மு. இஸ்மாயில், முன்னாள் அமைச்சர்களானதிருநாவுக்கரசு, சுதர்சனம், ஆலடி அருணா மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து எம்எல்ஏக்களும் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்திய பின்னர் அவையின் இன்றைக்கு முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக அவையில் முன்மொழியப்பட்ட இரங்கல் உரையில் நரசிம்ம ராவை அரசியல் சாணக்கியர் என்று வர்ணித்தார் சபாநாயகர்காளிமுத்து.
Comments
Story first published: Tuesday, February 1, 2005, 5:30 [IST]