கஞ்சா கேஸ்: முன் ஜாமீன் கோருகிறார் கதிரவனின் அண்ணன்
சென்னை:
அப்ரூவர் ரவிசுப்ரமணியத்தைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய வழக்கில் முன் ஜாமீன் கோரி கதிரவனின் அண்ணன்அலங்கார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டம் (கஞ்சா வழக்கு), கொலைச் சதித் திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்பட்டால் ஜாமீன் வழங்கக் கோரி அலங்கார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
அந்த மனுவில், கதிரவனின் அண்ணனாகிய என்னையும் சங்கரராமன் கொலை வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்என்னை தேவையில்லாமல் கஞ்சா வழக்கிலும்,கொலைச் சதி வழக்கிலும் சேர்த்துள்ளனர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. என் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டும் இல்லை. நான் அகிலனை சந்தித்ததே இல்லை. மேலும் இதில் கூறப்பட்டுள்ள சங்கரராமன்கொலை வழக்கு குற்றவாளிகள் தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை அகிலன் சந்திக்க வாய்ப்பேஇல்லை என்று அதில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.