ஆசிரியை மீனாட்சி மாயம்: அதிமுக எம்எல்ஏவிடம் லை-டிடெக்டர் சோதனை
கரூர்:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் அதிமுக எம்.எல்.ஏவும் மாஜி மந்திரியுமான பாப்பா சுந்தரத்திடம்லை-டிடெக்டர் (உண்மை கண்டறியும் கருவி மூலம்) சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் மீது சந்தேகம் தெரிவித்த மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கத்தை போலீசார் உலுக்கி எடுத்தனர். அவருக்கு பலவகைகளிலும் டார்ச்சர் தந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றத்திடம் இருந்து தொடர்ந்து குட்டு வாங்கி வருகிறது தமிழககாவல்துறை.
இப்போது இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம், அவரது சகோதரர் பசுபதி, ஆசிரியர் சிவக்குமார், பாப்பாசுந்தரத்தின் மகன் கருணாகரன், உறவினர் ரங்கநாதன் ஆகியோரிடம் லை-டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த லை-டிடெக்டர் கருவி பெங்களூரில் தான் உள்ளது. இதனால் அங்கு வைத்து தான் இவர்களிடம் சோதனைநடத்தப்பட்டது.
இந் நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு மதுரை உயர்நீதிம்ன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக எம்.எல்.ஏ.பாப்பா சுந்தரத்திடம் ஏன் லை-டிடெக்டர் சோதனை நடத்தவில்லை என்று போலீஸாருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
பாப்பாவை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்து வரும் காக்கிகள், இந்தக் கண்டனத்தையடுத்து அவரிடமும் லை-டிடெக்டர்சோதனையை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாப்பா சுந்தரம் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார்.
இதற்காக சிபிசிஐடி போலீஸார் முன் ஆஜராகுமாறு எம்.எல்.ஏவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பாப்பா சுந்தரம் தப்பே செய்யவில்லை, அவருக்கும் மீனாட்சி காணாமல் போனதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என முதல்வர்ஜெயலலிதா கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.