For Daily Alerts
Just In
இரா.செழியனுக்கு பெரியார் விருது
சென்னை:
முதுபெரும் அரசியல் வாதி இரா.செழியனுக்கு, தமிழக அரசி ன் சார்பில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு ஆண்டுதோறும்வழங்கப்படும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.
தமிழக அரசி ன், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்க வழங்கப்பட்டு வரும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினைபெற்றிட மூத்த அரசியல் தலைவரும், சிறந்த நாடாளு மன்றவாதியுமான இரா.செழியன் தேர்ந் தெடுக்கப்பட் டுள்ளார் எனமுதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.50 ஆண்டு காலத்திற்கும் மேல் சேவை ஆற்றியவர் இரா.செழியன். அ.தி.மு.க. தொடங்கிய போது இணைந்தவர். நாடாளுமன்றஉறுப்பி னராக 22 ஆண்டுகள் பணியாற்றியவர். பகுத்தறிவுக் கொள்கைகள், மூட நம்பிக்கை எதிர்ப்பு, சமூக விழிப்புணர்வுஇவற்றை மையமாகக் கொண்டு தமிழ் சமுதாயத்தை மேம்படுத்திட பலவகை யிலும் பாடுபட்ட செழியன் இவ் வாண்டுக்கானபெரியார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தங்கப் பதக்கம், ரூ. 1 லட்சம் பொற்கிழி, பின்னர் நடத்தப்படும் விழாவில் செழியனுக்கு வழங்கப்படும்.
Comments
Story first published: Sunday, September 18, 2005, 5:30 [IST]