For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் பலரும் விலகுவார்கள்: கிருஷ்ணன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

என்னைப் பின் தொடர்ந்து மேலும் பலர் பாமகவில் இருந்து விலக உள்ளார்கள் என அக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில்இணைந்த எம்எல்ஏ கிருஷ்ணன் கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தலித். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை வன்னியர்களுக்கே முக்கியத்துவம்தருகிறார்கள். மற்ற சமுதாயத்தினரை புறக்கணிக்கிறார்கள்.

சட்டசபையில் அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று நான் கன்னடத்தில் பேசினேன். முதல்வர் இது தொடர்பாக ஆவணசெய்வதாக சொன்னார். ஆனால், அதை மேலும் வலியுறுத்த பாமக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாமகவில் குடும்ப அரசியல் தலைதூக்கிவிட்டது. டாக்டர் ராமதாசின் குடும்பத்துக்கே அங்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

கட்சியில் என்னை தொடர்ந்து புறக்கணித்ததால் தான் இந்த முடிவை எடுத்தேன். யாரும் தூண்டிவிடவில்லை. என்னைப் போலவேநிறைய பேர் பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார்கள் என்றார்.

பாமகவை விட்டு விலகியதையடுத்து அந்தியூர் அருகே சேத்துநாம்பாளையத்தில் உள்ள கிருஷ்ணனின் வீட்டுக்கு மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X