For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லீவு-டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் மதுக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. 2 நாட்களுக்குக் கடை இருக்காது என்பதால் மதுக் கடைகளில்குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது.

சட்டசபைக்கு நாளை (திங்கள்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலை5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. வாக்குப் பதிவு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று மாலை 5 மணியுடன் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. நாளை மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்படாது.

2 நாட்களுக்கு தண்ணி அடிக்க முடியாது என்பதால், நேற்று காலை முதலேபாட்டில்களை ஸ்டாக் வாங்கி வைப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் குடிமகன்கள் அலை அலையாக வந்து சரக்குகளை வாங்கிச் சென்றனர்.

மேலும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தல்பணியாற்றும் தங்களது தொண்டர்களின் தாகத்தைத் தணிப்பதற்காக மொத்தமொத்தமாக பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

நாளை மாலை 5 மணிக்கு அனைத்து கடைகளும் திறந்து விடப்படும். அதன் பின்னர்வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 11ம் தேதி காலை முதல் மாலை வரை மீண்டும்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X