சென்னை:தமிழர்களை அழித்து வரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அட்டூழியத்தைஇந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சொந்த நாட்டு மக்களையே வதைக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசுமுற்றுகையிட்டு நெடுஞ்சாலையை மூடியுள்ளது வேதனைக்குரியது.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் உணவு, மருந்து கிடைக்காமல்அவதிப்படுகின்றனர். தமிழர் பகுதிகளில் முப்படைத் தாக்குதலை நடத்தி வருகிறதுஇலங்கை அரசு. இதனால் உணவுப் பொருட்களை செல்ல விடாமல் தடுப்பதாலும்,இலங்கை அரசு தமிழ் இனப் படுகொலையை செய்து வருகிறது.
இச் சூழ்நிலையில் ராஜபக்ஷே இந்தியா வருகிறார். பிரதமரை அவர் சந்திக்கும்போதுஇலங்கை அரசு செய்து வரும் இனப் படுகொலையை தட்டிக் கேட்க வேண்டும்.ராஜபக்ஷேவிடம் தனது கண்டனத்தை இந்தியா தெரிவிக்க வேண்டும்.
இலங்கை அரசின் செயல் காட்டுமிராண்டித்தனமான போக்கு ஆகும். இதைத் தடுத்துநிறுத்த இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.
தமிழர் வாழும் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இலங்கை அரசுராணுவத்தைத் திரும்பப் பெற இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழர்கள் பகுதிகளில்அமைதி நிலவ வேண்டும். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத்தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சொந்த நாட்டு மக்களையே வதைக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசுமுற்றுகையிட்டு நெடுஞ்சாலையை மூடியுள்ளது வேதனைக்குரியது.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் உணவு, மருந்து கிடைக்காமல்அவதிப்படுகின்றனர். தமிழர் பகுதிகளில் முப்படைத் தாக்குதலை நடத்தி வருகிறதுஇலங்கை அரசு. இதனால் உணவுப் பொருட்களை செல்ல விடாமல் தடுப்பதாலும்,இலங்கை அரசு தமிழ் இனப் படுகொலையை செய்து வருகிறது.
இச் சூழ்நிலையில் ராஜபக்ஷே இந்தியா வருகிறார். பிரதமரை அவர் சந்திக்கும்போதுஇலங்கை அரசு செய்து வரும் இனப் படுகொலையை தட்டிக் கேட்க வேண்டும்.ராஜபக்ஷேவிடம் தனது கண்டனத்தை இந்தியா தெரிவிக்க வேண்டும்.
இலங்கை அரசின் செயல் காட்டுமிராண்டித்தனமான போக்கு ஆகும். இதைத் தடுத்துநிறுத்த இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.
தமிழர் வாழும் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இலங்கை அரசுராணுவத்தைத் திரும்பப் பெற இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழர்கள் பகுதிகளில்அமைதி நிலவ வேண்டும். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத்தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.







