சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றவர் கைது

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST  
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
 
சென்னை: சிறுமியைக் கல்யாணம் செய்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக 45 வயது நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சிறுமி பவித்ரா (15). பத்தாவது வகுப்பு மாணவியான இவர் சென்னை புறநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் காணவில்லை.

இதுகுறித்து போலீஸில் பவித்ராவின் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில், பவித்ராவை ஆயிஷா மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோர் கடத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம், ரூ. 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு விற்றுள்ளனர்.

சிறுமியை விலை கொடுத்து வாங்கிய அப்துல் அவரை கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பவித்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார்.
இதையடுத்து அவரிடமிருந்து பவித்ரா தப்பினார். பின்னர் கோவையில் உள்ள காவல் நிலையத்தை அவர் அணுகினார்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் கடத்தப்பட்டு விற்கப்பட்டு, அவரை அப்துல் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

பெருங்களத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அப்துல், பவித்ராவை திருமணம் செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அப்துல்லைக் கைது செய்தனர். ஆயிஷாவையும், சதீஷையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
Topics: tn, crime, girl, arrest, prostitution, தமிழ்நாடு, குற்றம், சிறுமி, திருமணம், விபச்சாரம், கைது
மே 17, 2008 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 

தீபாவளி-எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம் எது?

சென்னை: தீபாவளி நாளன்று தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க அதிகாலை 3.30 மணி முதல் 6 மணி வரை நல்ல நேரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை வருகிற திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளிப் பண்டிகையின் முக்கிய அம்சமே கங்கா ஸ்நானம் எனப்படும் எண்ணெய்க் குளியல்தான். இதை நல்ல நேரத்தில்தான் செய்ய வேண்டும். எண்ணெய் தேய்த்துக்குளித்த பின்னர் புத்தாடை அணிந்து, சாமி கும்பிட்டு, இனிப்புகளை சாப்பிட்டு விட்டு பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். இதில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க அதிகாலை 3.30 மணி முதல் 6 மணி வரை உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி அஸ்தம் நட்சத்திரத்தில் வருகிறது. அஸ்தம்.....

பதினெட்டு சித்தர்கள் கோவில்

சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர். இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இன்று பழனிமலையின் பிரபலமும்,.....

இலவமும் 'இலை வசமும்': கருணாநிதி

சென்னை: தமிழக அரசு அமல்படுத்தி வரும் இலவசத் திட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது. அரசின் இலவசத் திட்டங்களை கேலி செய்வோர், 'இலை வசம்' ஆனவர்கள்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ரேஷன்கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இந்தப் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.சென்னைவேளச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தைத் திருநாளுக்கு பொங்கலிட தேவையான பொருட்களும், ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டிசேலைகளும் வழங்குவதை இணைத்து இன்றைய நிகழ்ச்சி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும்.....

காற்றாலை மின்சாரம் குறைந்தது - தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நகரங்களில் சுமார் 3 மணி நேரமும், கிராமப்புறங்களில் சுமார் 6 மணி நேரமும் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் உற்பத்தி குறைவு தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.வழக்கமாக 1400 மெகாவாட் மின்சாரத்தை தயாரித்து தந்த காற்றாலைகள் தற்போது 400 மெகா வாட்டுக்கு குறைவாக உற்பத்தி செய்து வருகிறது. இதனால் தான் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.சென்னை நகருக்கு மட்டும் இந்த மின்வெட்டில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையின் புறநகர் பகுதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வெட்டு இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது......
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
Oneindia  Oneindia Login