ஆகஸ்ட்டில் சிரஞ்சீவியின் புதிய கட்சி உதயம்
சிரஞ்சீவியின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் நிருபர்களிடம் பேசுகையில்,
சிரஞ்சீவியின் புதிய கட்சி, நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது அவருடைய பிறந்த தினமான ஆகஸ்டு 22ம் தேதி தொடங்கப்படும் என்றார்.
இந் நிலையில் அவருடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்றும் பயிற்சியும் மாநிலம் முழுவதும் துவக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி சிரஞ்சீவியின் நெருங்கிய நண்பர் டாக்டர் மித்ரா தலைமையிலான டீம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
கட்சிக்கு தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) என்று பெயர் சூட்டப்படும் எனத் தெரிகிறது. மேலும் கடித்தான கொடியும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்புறம் நீலமும், கீழ்ப்புறத்தில் சிவப்பு நிறமும் கொண்டதாக இந்தக் கொடி உள்ளது. கட்சியின் சின்னமாக உதயசூரியன், கண் ஆகியவற்றில் ஒன்று தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.
கட்சியின் இளைஞர் அணி தலைவராக சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான பவன் கல்யாண் செயல்படுவார் என்கின்றனர்.
கட்சிக்காக ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் 18 அறைகளுடன் பெரிய அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருவது குறி்ப்பிடத்தக்கது.