For Daily Alerts
Just In
போன் ஒட்டுக் கேட்பு விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல்
சென்னை: இரு மூத்த அதிகாரிகளின் தொலைபேசி பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் தனது விசாரணையை முடித்து, அதன் அறிக்கைய முதல்வர் கருணாநிதியிடம் இன்று சமர்ப்பித்தது.
தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் கடந்த மே மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அறிவித்தது.
நீதிபதி சண்முகம் கமிஷன் தனது விசாரணையை முடித்து சமீபத்தில் இடைக்கால அறிக்கையை அளித்தது. இன்று தனது இறுதி அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் தலைமைச் செயலகத்தில் நீதிபதி சண்முகம் வழங்கினார்.
Comments
Story first published: Monday, July 14, 2008, 14:44 [IST]