For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் ஸ்டிரைக்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: போலீஸார் லஞ்சம் கேட்டு தொல்லை செய்வதைக் கண்டித்து சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் ஷேர் ஆட்டோக்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.

சென்னை நகர போக்குவரத்து சேவையில் ஷேர் ஆட்டோக்களின் பங்கும் கணிசமானது. வழக்கமான ஆட்டோக்களில் போவதைப் போல இல்லாமல், நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து செல்வதுதான் ஷேர் ஆட்டோ. ஆனால் பல ஷேர்ஆட்டோக்களில் பத்து பேர் வரை அடைத்துக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இப்படி அதிக அளவில் செல்வதால் பல சமயங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இந்தநிலையில் தங்களிடம் லஞ்சம்கேட்டு போலீஸார் தொல்லை செய்வதாகவும், பொய் வழக்கு போடுவதாக மிரட்டுவதாகவும் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

போலீஸாரின் தொல்ைலக்கு முடிவு கட்டக்கோரி இன்று சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் ஷேர் ஆட்டோக்களை அதிகம் காண முடியவில்லை.

புதுச்சேரியில் உள்ளதைப் போல ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும். கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். போலீஸாரின் தொல்லைக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் 21ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X