மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம்: ராமதாஸ்
தர்மபுரி: மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் வாக்களிக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில்தான் பாமக இருக்கிறது என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரி வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசிலிருந்து பாமக வெளியேறப் போகிறது என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்தும் தவறானவையாகும்,.
நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறோம். 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எங்களது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வேலு, எம்.பி. ராமதாஸ் ஆகியோர்கலந்து கொண்டு பாமகவின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்ைக வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெல்லும். மத்திய அரசின் பதவிக்காலம் முழுமையாக நீடிக்கும். அடுத்த மே மாதம்தான்தேர்தல் வரும்.
காடுவெட்டி குரு விவகாரத்தில் நாங்கள் துவண்டு போய் விட மாட்டோம். சட்டரீதியாக எதிர்கொள்வோம். இந்தப் பிரச்சினை தொடர்பாக 16ம்தேதி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள எங்களது கட்சிஎம்.பிக்கள், எம்.எல்.ஏக்க்களுடன் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைசத்சர் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளோம்.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு பாமகதான் உயிர் கொடுத்தது. ஆனால் அந்தத் திட்டம் இன்று அடிக்கல் நாட்டப்பட்டதோடு மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் என்றாலும் அதற்கு முதல் கட்டமாக அடிப்படை வேலைகள் நடக்க வேண்டும். ஆனால் திட்டத்திற்குஇப்போதுதான் ஆலோசகரையே தேடிக் கொண்டிருக்கிறார்கள். திட்ட அறிக்கையும் தயாரிக்கப்படவில்லை. நிதி ஆதாரத்தையும் திரட்டவில்லை. அப்படி இருக்க அடிக்கல்நாட்டப்பட்டது எதற்காக.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட நினைத்தால் பாமக விடாது.
தமிழகத்தின் மிக மிக பின்தங்கியமாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வேலை வாய்ப்பு, தொழில் வளம் இல்லை. காரணம், மதுபானம்தான்.
அதிலும் தர்மபுரி மாவட்டம் மது பான விற்பனையில் முன்னணியில் உள்ளது. எனவே மதுபானத்தை விட்டு விட்டு மாநிலத்திலே மிகவும் பின் தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற சிறப்பு திட்டங்களை தீட்ட வேண்டும் என்றார் ராமதாஸ்.
--