For Daily Alerts
Just In
செங்கோட்டையில் 'கரன்சி' கணபதி!
செங்கோட்டை அருகேயுள்ள பண்பொழி தைக்காமுக்கு பகுதியில் நேற்று அப்பகுதி இளைஞர்களால் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 68 எண்ணம் கொண்டு 6 அடி உயரத்திற்கு மாலையாக கோர்த்து விநாயகருக்கு அணிவித்தனர்.
இதுகுறித்து அதிர்ஷ்ட விநாயகர் கமிட்டி பிரபு என்பவர் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகாலமாக இதுபோன்று ரூபாய் மாலைகள் அணிவித்து வருகிறோம். கடந்த ஆண்டு 500 ரூபாய் மாலை அணிவித்தோம். இப்போது ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்து அலங்கரித்துள்ளோம். அடுத்து 5 ஆயிரம் ரூபாய் வந்தாலும் இதே போன்று செய்வோம் என்றார்.
ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை ஏராளமானோர் கூடி நின்று வணங்கி வேடிக்கை பார்த்து சென்றனர்.
Comments
Story first published: Friday, September 5, 2008, 12:03 [IST]