பங்குச் சந்தை பீதி- குடும்பத்துடன் புரோக்கர் தற்கொலை

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19, 2008, 10:41 [IST]
ஹைதராபாத்: பங்குச் சந்தையில் நிலவி வரும் அசாதாரணமான நிலையால் பீதியடைந்த இரண்டு பங்கு புரோக்கர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் காஸ் சிலிண்டரை வெடித்தச் செய்து மனைவி, குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. ஆனால், இந்திய பங்குச் சந்தைகள் இதுவரை அந்த வீழ்ச்சியை பெருமளவில் எதிரொலிக்கவில்லை. ஓரளவுக்கு தாக்குப் பிடித்துக் கொண்டுள்ளன.

ஆனால், இந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறப்படுகிறது. சர்வதேச நிதி நிலவரம், இந்திய பங்குச் சந்தையையும் விரைவில் தாக்கும் எனத் தெரிகிறது.

இதனால் பங்கு முதலீட்டாளர்கள் மத்தியிலும் புரோக்கர்கள் மத்தியிலும் பெரும் பீதி நிலவி வருகிறது.

இந் நிலையில் பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த உபேந்திரா என்ற புரோக்கர், தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.

கேஸ் சிலிண்டரின் டியூபை துண்டித்த அவர் சமையல் எரிவாயுவை பரவச் செய்து தீயைப் பொறுத்திவிட்டு தீக்குளித்தார்.

அதில் உபேந்திரா, அவரது மனைவி ஸ்வாதி, மகன் சாய் ஆகிய மூன்று பேரும் பலியாயினர்.

இன்னொரு புரோக்கரும் தற்கொலை:

அதே போல மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்த ரவி சர்மா (30) என்ற புரோக்கரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST