சென்னை: தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
முருகன் கோவில்களில் கடந்த 29ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. விழாவின் 6வது நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், மருதமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான முருகன் திருத் தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முருகப் பெருமானின் முக்கியத் தலங்களில் மிக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. அதே போல சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
முருகன் கோவில்களில் கடந்த 29ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. விழாவின் 6வது நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், மருதமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான முருகன் திருத் தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முருகப் பெருமானின் முக்கியத் தலங்களில் மிக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. அதே போல சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.








