For Daily Alerts
Just In
ஊட்டியில் கோஷ்டி மோதல் - வீடுகள் சூறை
ஊட்டி: ஊட்டி, குண்டச்சட்டை எனும் பகுதியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்படன.
குண்டச்சட்டையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின் போது இரு வேறு பிரிவுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு மற்றும் முன் விரோதம் நிலவி வந்தது.
இந்த கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது பிரச்னை எழுந்து வாக்குவாதம், அடி தடி தகறாறு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரு பிரிவினருக்கு இடையே மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டடது.
இதில் இரு தரப்பினரும் முதலில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்பு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதிலில் பலர் படுகாயம் அடைந்தனர்.
சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை ஒரு தரப்பினர் சூறையாடினர். இதனால், அப் பகுதியில் பதற்றம் ஏற்ப்ட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Story first published: Wednesday, November 12, 2008, 16:47 [IST]