இலங்கைப் பிரச்சினையில் ஒருமித்து குரல் கொடுப்போம்: கருணாநிதி
தமிழக சட்டசபையில் இன்று இலங்கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று கோரி அரசினர் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் மீது அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர். இறுதியில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
முதல்வர் பேசுகையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தான் ஒரு இந்தியர் என்று கூறுவதில் பெருமைப்படுவதாக சொன்னார். இங்கே இலங்கை பிரச்சனை பற்றி பேசும்போது இலங்கைத் தமிழர்கள் என்று தான் பேசுகிறோமே தவிற இலங்கை இந்தியர் என்று பேசுவதில்லை. எனவே இது எந்த கோணத்தில் பார்க்கப்படுகிறது என்பதை ஆழ்ந்து சிந்திப்பது நல்லது.
தமிழர் படுகொலையை கண்டிக்கிற நேரத்தில் அரசியல் மாறுபாடுகளை மறந்து ஒரே உணர்வுடன் இருக்க வேண்டும். இனத்தை காப்பாற்றும் பொறுப்பு வரும்போது ஒற்றுமையாக இருப்போம். இப்பிரச்சனையில் பிரதமரும், சோனியா காந்தியும் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.