இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம்: சட்டசபையில் தீர்மானம்
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் முதல்வர் கருணாநிதி எழுந்து, ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
அதில், இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் நீங்க வேண்டுமானால், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். போர் நிறுத்தத்திற்கு ஒரு தரப்பு தயார் என அறிவித்துள்ள நிலையில், இலங்கை அரசும் போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும் என இந்த அவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
மத்திய அரசும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போர் நிறுத்தம் ஏற்பட உதவ வேண்டும். தமிழர் பகுதிகளில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த அவை கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தீர்மானம் மீது பேசத் தொடங்கினர். இறுதியில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.