இலங்கைத் தமிழர் நிவாரண நிதி ரூ. 20 கோடியைத் தாண்டியது
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் நிவாரண நிதி ரூ. 20 கோடியைத் தாண்டியுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு நிவாரண நிதியையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டி வருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
நேற்று மாலை வரை 20 கோடியே 63 லட்சத்து 29 ஆயிரத்து 235 ரூபாய் நிதியில் சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, பாமக தலைவர் ஜி.கே.மணி, அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சார்பில் ரூ. 1லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ. 50 லட்சம் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் அளிக்கப்பட்டது.
பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ ரூ. 1 லட்சம் நிதியுதவியை அளித்தார்.