For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: பழ.நெடுமாறன் ஆர்ப்பாட்டம் - கைது

By Staff
Google Oneindia Tamil News

Nedumaran
சென்னை: இலங்கைக்கு ராணுவ உதவிகளை வழங்கக் கூடாது, போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா சாலை, பெரியார் சிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

அப்போது செய்தியாளர்களிடம் பழ. நெடுமாறன் பேசுகையில், இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை வழங்கக் கூடாது, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

தமிழகமெங்கும் உள்ள மக்கள், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் சாரா அமைப்பினர் தமிழகமெங்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது என்றார்.

பின்னர் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக கூறி பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X