For Daily Alerts
Just In
செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்ப வேண்டும்: கலாம்
சண்டிகரில் நடந்த விண்வெளி ஆய்வுத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், சந்திராயன்-1 பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இனி நமது விஞ்ஞானிகள் செவ்வாய் பயணம் குறித்த கோணத்தில் சிந்திக்க வேண்டும். ஆய்வுகளைத் தொடங்க வேண்டும்.
சந்திராயன் -1 வெற்றி, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் வரலாற்றில் சிவப்பெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
நமது தொழில்நுட்பம் மற்றும் திறமையை உலகுக்குப் பறை சாற்றி விட்டோம் என்றார் கலாம்.
Comments
Story first published: Saturday, November 15, 2008, 9:49 [IST]