For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்ப வேண்டும்: கலாம்

By Staff
Google Oneindia Tamil News

Abdhul Kalam
சண்டிகர்: நிலவுப் பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து செவ்வாய் பயணம் குறித்த ஆய்வுகளை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நடந்த விண்வெளி ஆய்வுத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், சந்திராயன்-1 பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இனி நமது விஞ்ஞானிகள் செவ்வாய் பயணம் குறித்த கோணத்தில் சிந்திக்க வேண்டும். ஆய்வுகளைத் தொடங்க வேண்டும்.

சந்திராயன் -1 வெற்றி, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் வரலாற்றில் சிவப்பெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

நமது தொழில்நுட்பம் மற்றும் திறமையை உலகுக்குப் பறை சாற்றி விட்டோம் என்றார் கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X