For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை மதுரையில் மாயாவதி பிரச்சாரம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தர பிரதேச முதல்வருமான மாயாவதி நாளை மதுரை வருகிறார்.

வரும் மே 13ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது.

சமீபத்தில் இக்கட்சியில் சேர்ந்த சிவகாமி ஐஏஎஸ், கன்னியாகுமரி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். இதை தவிர்த்து மேலும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி வட்டாரம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் நாளை கட்சி தலைவரும் உத்தர பிரேதச முதல்வருமான மாயாவதி நாளை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மதுரை வருகிறார்.

அவர் மதுரை மேல மாசிவீதி, வடக்குமாசிவீதி சந்திப்பில் மாலை 5 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அப்போது அவர் மீதமுள்ள 19 வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பார் என தெரிகிறது. அதன்பின்னர் அவர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரத்தை துவங்குகிறார்.

பின்னர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். தொடர்ந்து பிரசார கேசட்டுகளை வெளியிடுகிறார். அவரது வருகையை அடுத்து மதுரையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X