மதுரை எம்.பி மோகன் டிஸ்சார்ஜ் ஆனார் - மீண்டும் பிரசாரம்
சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை எம்.பியும், அத்தொகுதிக்கான சிபிஎம் வேட்பாளருமான பி.மோகன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மாலையிலிரு்து அவர் மீண்டும் பிரசாரத்தில் குதிக்கிறார்.
தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மோகனுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரது குடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது விருப்பப்படி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார் மோகன். அங்கு குடல் வால்வில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த பத்து நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மதுரைக்கு விமானம் மூலம் கிளம்பிச் சென்றார்.
இன்று மாலையே மீண்டும் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் மோகன்.
மாலையில், ஜெய்ஹிந்துபுரம் மெயின்ரோடு, ஜீவா நகர், மதுரை கல்லூரி, பெரியார் நிலையம், சேதுபதி பள்ளி, சிம்மக்கல், ஒர்க்ஷாப் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ், ஏ.ஏ.ரோடு, டி.பி.ரோடு வழியாக பிரச்சாரம் செய்கிறார்.
மோகன் மீண்டும் களம் இங்கியுள்ளதால் சிபிஎம் - அதிமுக வட்டாரம் உற்சாகமடைந்துள்ளது.