For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகையில் ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரண செய்தியின் எதிரொலியாக நாகப்பட்டிணத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஈழ ஆதராவளர்கள் சாலை மறியல், தலைவர்களின் சிலையை சிதைப்பது, பஸ் கண்ணாடியை உடைப்பது போன்ற செயல்பகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமிழகம் முழுக்க பலத்த போலீல் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி பகுதியில் மின் கம்பங்களிலும், சாலையேரத்தில் உள்ள மரங்களிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன.

மேலும், இதன் உச்ச கட்டமாக வேளாங்கண்ணி ஆர்ச் அருகே இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் உருவப் பொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் இலங்கை அதிபர் உருவ பொம்பை எறித்தவர்களை பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X