உடற்பயிற்சி சாதனத்தில் சிக்கி மைக் டைசன் மகள் பலி

புதன்கிழமை, மே 27, 2009, 13:14 [IST]
பீனிக்ஸ்: குத்துச்சண்டை வீரர் மைக் டைசனின் நான்கு வயது மகள் வீட்டில் இருந்த உடற்பயிற்சி சாதனம் ஒன்றின் கேபிளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன். இவருக்கு பல மனைவிகள்ர். அவர்களின் மூலம் இவருக்கு ஜெனா (20), மைக்கே (18), ராய்னா (13), அமிர் (11), மைகுல் (7) மற்றும் எக்சோடஸ் (4) என ஆறு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது டைசன் பீனிக்ஸ் நகரில் மைகுல் மற்றும் எக்சோடஸ் ஆகிய என்ற இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருவதாக தெரிகிறது. இந் நிலையில் நேற்று முன்தினம் மைக் டைசனின் கடைசி குழந்தையான எக்சோடஸ் வீட்டில் இருந்தி உடற்பயிற்சி அறைக்குள் சென்று விளையாடி கொண்டிருந்தாள்.
  Read:  In English 
அப்போது அங்கு இருந்த உடற்பயிற்சி சாதனம் ஒன்றின் கேபிள் அந்த சிறுமியின் கழுத்தை சுற்றி இறுக்கியது. இதில் குழந்தை அந்த இடத்திலே மயங்கினாள். கழுத்தில் கேபிள் இறுகி அவள் தொங்கி கொண்டிருப்பதை பார்த்த அவளது சகோதரன் மைகுல் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஓடிச் சென்று சிறுமியை மீட்ட தாய் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவி்ட்டனர்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets