For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எதிர்த்து தேமுதிக வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

DMDK Flag
சென்னை: தமிழக சட்டசபைக்கு நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தேமுதிக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நலன் மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 13ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிட்டது. எந்த கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்து போட்டியிட்டது.

இந்த தேர்தலில் முழுக்க, முழுக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்களில் முறைகேடுகளும், குளறுபடிகளும் வாக்குப்பதிவின்போது நடைபெற்றன.

மத்திய சென்னை தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளரின் சின்னத்துக்கு பட்டனை அழுத்தினால், அது ஆளும் கட்சி வேட்பாளருக்கு சாதகமாக ஓட்டு விழுந்தது. விருதுநகர் தொகுதியில் பதிவான ஓட்டுகளைவிட, கூடுதலாக 26 ஆயிரம் ஓட்டுகள் முறைகேடாக பதிவாகியுள்ளன. திண்டுக்கல் தொகுதியில் தே.மு.தி.க. சின்னத்தின் பட்டனை அழுத்தினால், காங்கிரஸ் வேட்பாளரின் சின்னத்தில் விளக்கு எரிந்தது.

வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தால் அது முற்றிலுமாக மாற்றப்படவேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இதுகுறித்து எங்களது கட்சியினர் புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல இடங்களில் 5 ஓட்டுகள் பதிவானால், அதில் ஒரு ஓட்டு ஆளுங்கட்சிக்கு தானாகவே பதிவானது. இதுபோன்று தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தால் முறைகேடுகள் நடந்துள்ளன.

இந்த இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் முழு பயிற்சி அளிக்கவில்லை. ஆகவே, தமிழ்நாட்டில் இனி நடக்க இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள முறையான வாக்கு சீட்டு முறையில் இடைத்தேர்தலை நடத்துமாறு கோர்ட்டு உத்தரவிட வேண்டும். மேலும் எதிர்காலத்திலும் மின்னணு வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது என்று கோரப்பட்டிருந்தது.

இதைப் பரிசீலித்த நீதிபதிகள் தனபாலன், சுந்தரேஷ் ஆகியோர் இதுகுறித்து 3 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசு, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அதே போல மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை கைவிட வேண்டும் என அதிமுக, பாமக, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X