டெல்லி: பெரும் நஷ்டத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிதிச் சிக்கலிலிருந்து மீண்டு வர ரூ. 20, 000 கோடி உதவி நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளது.
இதில் ரூ. 10,000 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. மீதமுள்ள நிதியை அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 2500 முதல் ரூ. 3000 கோடி வரை தருமாறும் அது மத்திய அரசைக் கேட்டுள்ளது.
மேலும் பழைய விமானங்களைத் தூரப் போட்டு விட்டு புது விமானங்களை வாங்கவும் அது அனுமதி கோரியுள்ளது.
இப்படி மொத்தமாக ரூ. 20 ஆயிரம் கோடியைக் கேட்டு நிற்கிறது ஏர் இந்தியா. இது டெல்லி மாநிலத்திற்கான வருடாந்திர பட்ஜெட் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ரூ. 10,000 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. மீதமுள்ள நிதியை அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 2500 முதல் ரூ. 3000 கோடி வரை தருமாறும் அது மத்திய அரசைக் கேட்டுள்ளது.
மேலும் பழைய விமானங்களைத் தூரப் போட்டு விட்டு புது விமானங்களை வாங்கவும் அது அனுமதி கோரியுள்ளது.
இப்படி மொத்தமாக ரூ. 20 ஆயிரம் கோடியைக் கேட்டு நிற்கிறது ஏர் இந்தியா. இது டெல்லி மாநிலத்திற்கான வருடாந்திர பட்ஜெட் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.








